பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு கிடைத்தது காத்திருப்பு பட்டியல்!

 

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு கிடைத்தது காத்திருப்பு பட்டியல்!

பாலியல் புகாரில் சிக்கிய தமிழக அரசின் அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபியாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு கிடைத்தது காத்திருப்பு பட்டியல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பாதுகாப்புக்காக சென்னையிலிருந்து சென்ற தமிழக அரசின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்தார். அப்போது அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர். காரில் சென்றபோது பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் ராஜேஷ்தாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு கிடைத்தது காத்திருப்பு பட்டியல்!

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாலியல் புகாரில் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த சூழலில்தான் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளப்பட்டார். இந்த உத்தரவை உள்துறை செயலாளர் எஸ்.கே பிரபாகர் அவர்கள் பிறப்பித்தார். அவரை பணியிடைநீக்கம் செய்திடவேண்டும் என அரசியல்கட்சியினர் கோரிக்கை விடுத்த நிலையில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.