சசிகலாவை வரவேற்க தயாராகும் 35 அடி கட் அவுட்!

 

சசிகலாவை வரவேற்க தயாராகும் 35 அடி கட் அவுட்!

வரும் 8ம் தேதி தமிழகம் வருவதாக இருக்கும் சசிகலாவை வரவேற்க 35 அடி உயர கட் அவுட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்ததையடுத்து பெங்களூரு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் எனக்கூறிய டிடிவி தினகரன் திடீரென அவர் 8 ஆம் தேதி வருவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். போஸ்டர், பேனர் என அதகளப்பட்டுவருகிறது. கர்நாடகா எல்லையில் இருந்து சென்னை வரும் வரை வழி நெடுக சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா – ஓசூர் – ஆம்பூர்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரும் சசிகலாவுக்கு வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சசிகலாவை வரவேற்க தயாராகும் 35 அடி கட் அவுட்!

இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் சசிகலாவை வரவேற்று 35 அடி உயர கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே எல்இடி விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சசிகலாவை வரவேற்கும் விதமான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.