பாலிவுட் நடிகை ரியாவின் வாக்குமூலத்தால் சிக்கும் 15 பாலிவுட் நடிகர்கள்!

 

பாலிவுட் நடிகை ரியாவின் வாக்குமூலத்தால் சிக்கும் 15 பாலிவுட் நடிகர்கள்!

பாலிவுட் நடிகை ரியா சக்கரபோர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். அவரது காதலனும், பிரபல இந்தி நடிகருமான சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையின் போது நடிகை ரியாவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் மனுவையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ரியாவின் வாக்குமூலத்தால் சிக்கும் 15 பாலிவுட் நடிகர்கள்!

இந்நிலையில் நடிகை ரியா, விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் அடிப்படையில், போதை மருந்து பயன்படுத்துவது தொடர்பாக 15 பாலிவுட் நடிகர்கள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.