மாற்றுத்திறனாளிகள் சிரமும் இல்லாமல் தடுப்பு ஊசி செலுத்த சிறப்பு ஏற்பாடு- தமிழக அரசு

 

மாற்றுத்திறனாளிகள் சிரமும் இல்லாமல் தடுப்பு ஊசி செலுத்த சிறப்பு ஏற்பாடு- தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமும் இல்லாமல் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சிரமும் இல்லாமல் தடுப்பு ஊசி செலுத்த சிறப்பு ஏற்பாடு- தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அறிக்கையில், “அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலு மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.