11 எம்எல்ஏக்கள் விவகாரம்; விசாரணையை தொடங்கினார் சபாநாயகர்!

 

11 எம்எல்ஏக்கள் விவகாரம்; விசாரணையை தொடங்கினார் சபாநாயகர்!

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

11 எம்எல்ஏக்கள் விவகாரம்; விசாரணையை தொடங்கினார் சபாநாயகர்!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் 3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதனைத்தொடர்ந்து திமுக சார்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனைத்தொடர்ந்து, சபாநாயகர் பதில் அளிக்க அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

11 எம்எல்ஏக்கள் விவகாரம்; விசாரணையை தொடங்கினார் சபாநாயகர்!

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தது தொடர்பாக சபாநாயகர் விசாரணையை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக எம்எல்ஏக்கள் பாண்டியராஜன் மற்றும் நடராஜிடம் தனது வீட்டில் இருந்து காணொளி வாயிலாக சபாநாயகர் விசாரித்து வருகிறார். அதே போல, தினகரனுக்கு ஆதரவளித்ததால் தகுதி நீக்கப்பட்ட முன்னாள் எம்எம்ஆர் சோளிங்கர் பார்த்திபனிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.