நிசப்தமான குரல்! பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…!

 

நிசப்தமான குரல்! பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதே நேரம் மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் எதிரொலியாக எஸ்பிபி இந்த மாத தொடக்கத்தில் கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக அவர் ஆவலோடு காத்திருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

நிசப்தமான குரல்! பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…!

நேற்று மாலை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத்தும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனிடையே எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே இருப்பதால் குடும்ப உறவினர்களுக்கு தகவல் சொல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

நிசப்தமான குரல்! பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்…!

பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.