எஸ்பிபிக்கு வாய் வழியாக உணவு வழங்கவுள்ளனர்: சரண் நெகிழ்ச்சி

 

எஸ்பிபிக்கு வாய் வழியாக உணவு வழங்கவுள்ளனர்: சரண் நெகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதே நேரம் மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.

எஸ்பிபிக்கு வாய் வழியாக உணவு வழங்கவுள்ளனர்: சரண் நெகிழ்ச்சி

இந்நிலையில் எஸ்.பி.பி. மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். எனது தந்தையின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறது. அதனை எக்ஸ்ரே மூலம் காண முடிந்தது. அவரால் 15 முதல் 20 நிமிடம் வரை உட்கார முடிகிறது. வாய் வழியாக உணவு வழங்கவுள்ளனர். பிசியோதெரபிக்கு அவரது உடல் முழுமையாக ஒத்துழைக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் உதவியுடன் 20 நிமிடங்கள் எழுந்து அமர்கிறார்” என தெரிவித்துள்ளார்.