வென்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை: மகன் எஸ்.பி.பி. சரண்

 

வென்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை: மகன் எஸ்.பி.பி. சரண்

அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவும் கொரோனா வைரஸால், இசை ஜாம்பவானான எஸ். பி.பாலசுப்பிரமணியமும் பாதிக்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வென்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை: மகன் எஸ்.பி.பி. சரண்

இந்நிலையில் பிரபல திரைப்படப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண் விளக்கமளித்துள்ளார். அதாவது வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் ரசிகர்களின் பிரார்த்தனையால் தந்தை மீண்டு வருவார் என்றும் சரண் தெரிவித்துள்ளார்.