எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு: போற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்!

 

எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு: போற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்!

பாடும் நிலா பாலு என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் சினிமா துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் உடல் காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு: போற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்!

இதன்பின்னர் அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவர் வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்திருந்தது. ஆனாலும் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு: போற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்!

இதனால் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினரும் அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜா, அமீர், இசை அமைப்பாளர்கள் தினா, தேவிஶ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பி. இறுதிச்சடங்கு: போற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்!

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவரது மகன் எஸ்பிபி சரண் இறுதிச்சடங்குகளை செய்து வந்தார். தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் இறுதிச் சடங்கை செய்தனர். இதன்பின்னர் எஸ்.பி.பி. உடலை நல்லடக்கம் செய்ய தூக்கிச்சென்றனர். அப்போது, ரசிகர்களை எஸ்.பி.பி.யை போற்றி முழக்கமிட்டனர்.