தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது! அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை

 

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது! அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் புறப்பட்டது! அங்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை

இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுஇருந்த எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பண்ணை வீட்டில் அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை.

எஸ்பிபி அடக்கம் செய்ய உள்ள தாமரைப்பாக்கம் பண்ணையில் 4 டிஎஸ்பிகள் தலைமையில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. 2 கி.மீ. முன்னதாகவே வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.