ஓ.பி.எஸ் வழிகாட்டுதலோடு 2021ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

 

ஓ.பி.எஸ் வழிகாட்டுதலோடு 2021ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

ஓ.பி.எஸ் வழிகாட்டுதலோடு 2021ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ் மணியன், “2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியின் தலைமையில், ஓ. பி.எஸ் வழிகாட்டுதலோடு அமையும். இரண்டு பேரும் இரண்டு சகோதரர்கள். அண்ணன் தம்பி போல என்றைக்கும் இன்றைக்கும் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள்” எனக் கூறினார்.