ஸ்டாலின் என்றைக்கும் முதல்வராக முடியாது என்று அவரது அண்ணணே சொல்லிவிட்டார்- அமைச்சர் எஸ்பி வேலுமணி

 

ஸ்டாலின் என்றைக்கும் முதல்வராக முடியாது என்று அவரது அண்ணணே சொல்லிவிட்டார்- அமைச்சர் எஸ்பி வேலுமணி

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கோவையில் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, “அம்மா அவர்கள் உருவாக்கிய தொண்டர்கள் மிகவும் விசுவாசமாக இருப்போம். தில்லு முல்லு வேலை செய்து ஆட்சியை கலைக்க பர்த்தார்கள், நானும் தங்க மணியும் சேர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாடுபட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாது என்று நினைத்தார்கள் பெரிய கூட்டணி அமைத்தோம். ஐந்து பவுன் தங்கம் , கல்விக்கடன் ரத்து போன்ற பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வாக்குகள் பெற்றார்.

ஸ்டாலின் என்றைக்கும் முதல்வராக முடியாது என்று அவரது அண்ணணே சொல்லிவிட்டார்- அமைச்சர் எஸ்பி வேலுமணி

அம்மா எனக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கொடுத்தார். நான் விசுவாசமாக இருக்க வேண்டாமா, அதனால் திமுக ஆட்சியை கலைக்க நான் தடையாக இருக்கிறேன். இங்கு வந்த ஸ்டாலின் பல பொய்களை சொல்லி சென்று உள்ளார். யாராவது துண்டு சீட்டு கொடுத்தால் அப்படியே படித்து விட்டு சொல்லி விடுகிறார். கோவையில் 50 ஆண்டுகாலம் வளர்ச்சியை கொடுத்து உள்ளோம். அனைத்து பகுதிகளிலும் சாலை பாலம் அமைத்து விபத்தை குறைத்து உள்ளோம். ஏர்போர்ட் 20 ஆண்டுகால பிரச்சனையை சுலபமாக முடித்து உள்ளோம். ஸ்மார்ட்சிட்டி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்திக்கடவு அவினாசி திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் உரிமையோடு வாக்கு கேட்க எங்களால் முடியும்

இலங்கையில் தமிழர்கள் பிரச்சனையில் 50 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவித்தார்கள். சிங்களர்கள், தமிழக பெண்களை கற்பழித்தனர். மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்க தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். கிராம சபை கூட்டம் வருடத்தில் 4 நாட்கள் நடந்த வேண்டும் ஆனால் ஸ்டாலின் 3 நாட்கள் நடத்த வேண்டும் என்று தவறாக பேசி வருகிறார். கிராம சபை கூட்டத்தில் மனு வாங்கி குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். ஸ்டாலின் என்றைக்கும் முதலமைச்சர் ஆக முடியாது என்று அவரது அண்ணணே சொல்லி விட்டார். பொய் புரட்டு சொல்லி எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார்” எனக் கூறினார்.