“கழுத்த அறுத்துருவேன்”… அமைச்சர் வேலுமணி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு புகார்!

 

“கழுத்த அறுத்துருவேன்”… அமைச்சர் வேலுமணி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு புகார்!

கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதி இந்தத் தேர்தலில் அதிக கவனம் பெற்றது. காரணம் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி களமிறங்கியிருந்தார். குறிப்பாக கோவையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து களம் காண்கிறார். ஆரம்பத்திலிருந்தே வேலுமணியின் ஊழல்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் பிரச்சாரங்கள் செய்துவந்தார்.

“கழுத்த அறுத்துருவேன்”… அமைச்சர் வேலுமணி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு புகார்!

வேலுமணிக்கு பெரும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் வேலுமணியோ கடைசி வரை சேனாதிபதியின் பெயரைக் கூட உச்சரிக்காமல் திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் எதிர்த்தே பிரச்சாரம் செய்தார். இருப்பினும், களத்தில் அவரின் ஆதரவாளர்கள் சேனாதிபதியை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டனர். வேலுமணியைப் பொறுத்தவரை அவரது இமேஜுக்கு டேமேஜ் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர். தொகுதியில் அதிக இஸ்லாமியர்கள் வாக்கு இருப்பதால் பாஜக தலைவர்களைக் கூட பிரச்சாரம் செய்ய விடாமல் தவிர்த்தே வந்தார்.

“கழுத்த அறுத்துருவேன்”… அமைச்சர் வேலுமணி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு புகார்!

இதற்கு நடுவே வேலுமணி ஆதரவாளர் ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கொலை மிரட்டல் விடுப்பதாக தேர்தல் அதிகாரிகளிடம் சேனாதிபதி புகாரளித்தார். புகாரின்பேரில் அவரைக் கைதுசெய்து விசாரித்துவந்தனர். இச்சூழலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தொண்டாமுத்தூரில் அதிமுகவினரும் திமுகவினரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது வேலுமணி ஆதரவாளர் ஒருவர், “எங்க அண்ணனையே எதிர்த்து போட்டியிடுறீயா… கழுத்த அறுத்துருவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

“கழுத்த அறுத்துருவேன்”… அமைச்சர் வேலுமணி கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு புகார்!

இதையடுத்து அமைச்சர் வேலுமணியே தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சேனாதிபதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையரிடம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொண்டாமுத்தூரில் பரபரப்பு நிலவிவருகிறது.