அப்பா பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிக்கிறார் – எஸ்பிபி சரண்

 

அப்பா பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிக்கிறார் – எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து தற்போது அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடல்நலம் தேறி மீண்டு வர கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

அப்பா பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிக்கிறார் – எஸ்பிபி சரண்

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடல்களை கேட்பதாகவும், பாட முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். மேலும் 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ள சரண்,இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக உடல்நலம் தேறுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.