21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்!

 

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரை பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும். எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்!

இதனிடையே இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த எஸ்பிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.