கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்! – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்! – வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் அரபிக் கடல், மாலத்தீவு கொமாரியன் பகுதி, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நிலவும் சூழல் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு ஏற்றதாக உள்ளது. இதனால், தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்! – வானிலை ஆய்வு மையம் தகவல்தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் இருந்தது. சில மாவட்டங்களில் சராசரியாக 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் இருந்தது. வெப்பச்சலனம் காரணமாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்! – வானிலை ஆய்வு மையம் தகவல்வெப்பச்சலனம் காரணமாக தென், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடந்த சில நாட்களாக தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் நாளை புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென்கிழக்கு தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளா லட்சத்தீவு, கேரளா கடலோர பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் இன்று முதல் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.