ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… ஷாக் ஆன மருத்துவர்கள்: சாதனை படைத்த பெண்மணி!

 

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… ஷாக் ஆன மருத்துவர்கள்: சாதனை படைத்த பெண்மணி!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி கோசியாம் தாமரா சித்தோல் (37) ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே தங்களுக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக அவரது கணவன் டெபோஹோ சோடெட்சி தெரிவித்துள்ளார். சிசேரியன் முறையில் குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறிய மருத்துவர்கள், தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… ஷாக் ஆன மருத்துவர்கள்: சாதனை படைத்த பெண்மணி!

10 குழந்தைகள் தனக்கு பிறந்ததையறிந்து எமோஷனல் ஆன கோசியாம் தாமரா எனக்கு 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மிகவும் சந்தோஷமாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… ஷாக் ஆன மருத்துவர்கள்: சாதனை படைத்த பெண்மணி!

இதற்கு முன்னதாக மாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஹலிமா சிசி, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஸ்கேன் எடுக்கும் போது இவருக்கு 7 குழந்தைகள் இருப்பதாக தெரிய வந்த நிலையில் பிரசவத்தின்போது 9 குழந்தைகளை பெற்றெடுத்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம் பெறவுள்ள நிலையில், ஹலிமா சிசியின் சாதனையை கோசியாம் தாமரா முயிடித்துள்ளார்.