கங்குலிக்கு இரண்டாம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!

 

கங்குலிக்கு இரண்டாம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இரண்டாம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.

கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் ஆனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இரண்டாம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவுள்ளது. கங்குலியின் இருதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 2 ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கங்குலிக்கு இரண்டாம் முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!

கடந்த 2ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டார். அங்கு 9 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சையளித்தது. சிகிச்சையில் கங்குலியின் இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பிருப்பது தெரியவந்தது. அதில் ஒரு அடைப்புக்கு மட்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்த மருத்துவர்கள், 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். தொடர்ந்து ஜனவரி 7 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று அவருக்கு நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.