முழு சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்: எம்.எல்.ஏ பிரபு மனைவி

 

முழு சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்: எம்.எல்.ஏ பிரபு மனைவி

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது பெற்றோர்கள் தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. இதில் பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அதிமுக செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார். எம்.எல்.ஏ பிரபுவுக்கும் அவரது தந்தைக்கும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. சுமார் 35 வயதான எம்.எல்.ஏ. பிரபுவுக்குவும் தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் சாதியை காரணம் காட்டி காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சௌந்தர்யாவின் முழு சம்மதத்துடன் அவரை வீட்டிலிருந்து அழைத்துவந்த எம்.எல்.ஏ. பிரபு தனது உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறைபடி திருமணம் செய்துகொண்டார். ஆனால் சாமிநாதனின் தூண்டுதலின்பேரில் எம்.எல்.ஏ.பிரபு தனது மகள் செளந்தர்யாவை கடத்தி சென்றுவிட்டதாக வதந்தியை சிலர் பரப்பினர். சாமிநாதனும் தனது மகளை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

முழு சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்: எம்.எல்.ஏ பிரபு மனைவி

இந்நிலையில் பிரபுவின் மனைவி செளந்தர்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “ அதிமுக எம்.எல்.ஏ பிரபு என்னை கடத்தி செல்லவில்லை. நாங்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தோம். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய நான் பிரபுவை திருமணம் செய்துகொண்டேன், என்னை கடத்திவந்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறுகின்றனர். இதில் உண்மை இல்லை. என்னுடைய முழு சம்மதத்தில்தான் திருமணம் நடந்தது” எனக் கூறியுள்ளார்.