தொடர் மழையால் நிரம்பிய சோத்துப்பாறை அணை… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

 

தொடர் மழையால் நிரம்பிய சோத்துப்பாறை அணை… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

தேனி

பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியதை அடுத்து, வராக நதியின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான அகமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.

தொடர் மழையால் நிரம்பிய சோத்துப்பாறை அணை… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

இந்த நிலையில், நேற்று காலை அணை தனது முழு கொள்ளளவான 126 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 57 கனஅடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரும் 16ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் வன வானிலை மையம் எச்சரித்து உள்ளதால், வராக நதியின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.