நானும் பொறியாளர் தான்… நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வையுங்கள் – நடிகர் சோனு சோட் வலியுறுத்தல்
நீட், ஜெ.இ.இ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சோட் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசுகள் உதவி செய்ய முன்வராத நிலையில் ஆயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப பஸ் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தவர் நடிகர் சோனு சோட். தமிழில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் அவரது சேவைகள் காரணமாக மக்கள் மத்தியில் ஹீரோவாக உருவெடுத்துவிட்டார்.
இந்தியா முழுவதும் தினம் தினம் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொடும் நிலையில் நீட், ஜெ.இ.இ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். எனவே, அவர்களுக்கு நம்முடைய ஆதரவு தேவை. பீகார் மாநிலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அங்கு 13-14 மாவட்டங்கள் மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
#NEETJEE परीक्षा में बैठने वाले बच्चे सुदूर इलाकों से आते हैं।बिहार के किसी गांव में बाढ़ है तो किसी जिले में पूरी बंदी। हां,परीक्षा जरूरी है लेकिन उन युवा कंधो की हिफ़ाज़त भी उतनी ही जरूरी है।पूरे विश्व में सबकुछ प्रकृति के सामने ठहर गया तो परीक्षा को कुछ वक्त के लिए टालना चाहिए pic.twitter.com/QABfYbPcsX
— sonu sood (@SonuSood) August 25, 2020