“எவன் சொன்னான் ,சொத்து இருந்தா சந்தோஷம் வரும்னு ..”.-இந்த கோடீஸ்வர தாத்தாவின் கஷ்டத்தை பாருங்க.

 

“எவன் சொன்னான் ,சொத்து இருந்தா சந்தோஷம் வரும்னு ..”.-இந்த கோடீஸ்வர தாத்தாவின் கஷ்டத்தை பாருங்க.

சொத்துக்காக தனது வயதான தந்தையை தினமும் பிள்ளைகள் அடித்து, உதைத்து ,சித்திரவதை செய்யும் கொடுமையால் அந்த முதியோர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார்கள் .

பஞ்சாப் மாநிலம் பதீந்தாவைச் சேர்ந்த 75 வயதான சாது ராம் என்ற தொழிலதிபர் தனது மகன்களான அனில் குமார் (50), சஞ்சீவ் குமார் (47), ராஜீவ் குமார் (45), ஆகியோருடன் வசித்து வந்தார் .அப்போது தனக்கு வயதாகி விட்டதால் அவருக்கு இருக்கும் 150 கோடிரூபாய் சொத்துக்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு தன்னுடைய பங்காக 30 கோடிரூபாய் சொத்துக்களை வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஆனால் அந்த தாத்தாவின் 30 கோடி ரூபாய் சொத்துக்களை கேட்டு அவரின் மூன்று பிள்ளைங்களும் மருமகள்களும் அவரை பாடாய் படுத்தி எடுக்கிறார்கள் .அதனால் அவரின் வீட்டிற்கு தினம் ஒரு மகன் அவர்களின் பேரன்களோடு வந்து அவரை அடித்து ,உதைத்து சொத்துக்களை தனக்கு எழுதி வைக்குமாறு கொடுமை படுத்துகிறர்கள் .இதனால் அந்த தாத்தா தன்னுடைய மனைவியோடு மகளின் வீட்டிற்கு போனார் அங்கும் அவரின் பிள்ளைகள் , மருமகன்களோடு சேர்ந்து கொண்டு அந்த 30 கோடி சொத்துக்களை கேட்டு அவரை தெருவில் இழுத்து போட்டு அடித்தார்கள் .இதனால் மணமுடைந்த அந்த தாத்தா நேராக போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னை பாதுகாக்குமாறு மூன்று பிள்ளைகள், மருமகள் , பேரன்கள் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்துள்ளார்கள் .இருந்தாலும் அந்த முதிய தம்பதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று அஞ்சி வாழ்கிறார்கள் .

“எவன் சொன்னான் ,சொத்து இருந்தா சந்தோஷம் வரும்னு ..”.-இந்த கோடீஸ்வர தாத்தாவின் கஷ்டத்தை பாருங்க.