போதையில் வெறியாட்டம்: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவை திறக்காததால் தந்தையை கொன்ற மகன்!

 

போதையில் வெறியாட்டம்: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவை திறக்காததால் தந்தையை கொன்ற மகன்!

வீட்டின் கதவை திறக்காத தந்தையை மதுபோதையில் இருந்த குத்திக்கொலை செய்துவிட்டு மர்மமான முறையில் இறந்ததாக அடக்கம் செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் முருகன்(50). கட்டிடத்தொழிலாளியான முருகன் தனது மனைவி சித்ரா மற்றும் மகன் திவாகர்(21) மற்றும் மகள் ஷாலினியுடன் வசித்து வந்தார். மதுபோதையில் முருகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறி மனைவி சித்ரா மற்றும் மகன் திவாகர் உள்ளிட்டோர் முருகனின் உடலை அதேபகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய முயன்றுள்ளர். ஆனால், முருகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக முருகனின் உறவினர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், செல்வபுரம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகன் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்ததும், மதுபோதைக்கு அடிமையான திவாகர் அடிக்கடி மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால், தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். சம்பவத்தன்று மதுபோதையில் நள்ளிரவில் வந்த திவாகர், கதவை திறக்குமாறு கூறியும், நீண்ட நேரமாகியும் திறக்காமல், சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டின் கதவு திறக்கப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த திவாகர், முருகனுடன் வாக்குவாத்ததில் ஈடுப்பட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாற சற்றும் எதிர்பாராத சமயத்தில் அருகிலிருந்த முடியை சிக்கு எடுக்கும் மயிர்கோதியை எடுத்த திவாகர் தந்தை முருகனின் நெஞ்சி்ல் குத்தியுள்ளார்.

போதையில் வெறியாட்டம்: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவை திறக்காததால் தந்தையை கொன்ற மகன்!

இதில் சம்பவ இடத்தில் முருகன் உயிரிழந்த நிலையில், இதைமறைக்க முயன்ற திவாகர் உள்பட குடும்பத்தினர், முருகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக நாடகமாடியிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து முருகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திவாகரை கைது செய்துள்ள செல்வபுரம் போலீசார், முருகனின் மனைவி சித்ரா, மருமகன் கனகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.