கள்ளக் காதலிக்கு சொத்தை எழுதி வைக்க முடிவு செய்த தந்தையை கொன்ற மகன்!

 

கள்ளக் காதலிக்கு சொத்தை எழுதி வைக்க முடிவு செய்த தந்தையை கொன்ற மகன்!

ஈரோட்டில் தந்தையை வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கள்ளக் காதலிக்கு சொத்தை எழுதி வைக்க முடிவு செய்த தந்தையை கொன்ற மகன்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (55), இவர் மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து கொண்டும், கட்டிட வேலைக்கு சென்று கொண்டும் உள்ளார்,

இவருக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் உள்ளது, இவருக்கு மனைவி மல்லிகா, மகன் செந்தில்குமார்(35) மற்றும் மகள் ஒருவர் உள்ளனர், மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆன நிலையில், அர்ஜுனன் அதே பகுதியில் மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது,

மேலும் அந்தப் பெண்ணுக்கு தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை எழுதி வைக்கப்போவதாக கூறி வந்துள்ளார், இதன் காரணமாக மகன் செந்தில்குமார் அடிக்கடி தனது தந்தையுடன் சண்டையிட்டு உள்ளார், இந்நிலையில் வேம்பத்தி தனியார் பள்ளி அருகே நின்றுக்கொண்டிருந்த அர்ஜுனனை, அங்கு வந்த செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்,

இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை வெட்டிவிட்டு செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார், தொடர்ந்து ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்ததுடன் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.