மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

 

மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

சென்னை

நெற்குன்றத்தில் மதுபோதையில் தாயை இரும்பு பைப்பினால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதியம்மாள் (60). இவரது மகன் மகேஷ்(40). மதுப் பழக்கத்திற்கு அடிமையான மகேஷ், மதுஅருந்திவிட்டு வந்து அடிக்கடி அவரது தாயார் ஆதியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு வந்த அவர், ஆதியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மகேஷ், வீட்டில் இருந்த இரும்பு பைப்பினால் ஆதியம்மாளின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் உறவினர்கள் சென்று பார்த்தபோது ஆதியம்மாள் கொலைசெய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு உதவி ஆணையர் ஜெயராமன், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், கொலை தொடர்பாக மகேஷை கைதுசெய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.