டிக் டாக் வாலிபர் -வலையில் விழுந்த பெண்கள் -ஊர் ஊராக கூட்டி வந்து செய்த கொடுமை

 

டிக் டாக் வாலிபர் -வலையில் விழுந்த பெண்கள் -ஊர் ஊராக கூட்டி வந்து செய்த கொடுமை

சமீபத்தில் பங்களாதேஷிலிருந்து ஒரு பெண்ணை பெங்களூருக்கு கடத்தி வந்த ஆறு வாலிபர்கள் ,அந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பொலிஸாருக்கு தெரிய வந்தது .போலீசார் அந்த வழக்கை விசாரிக்கும்போது அந்த வழக்கில் ஒரு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு ,பிரபலமாக இருக்கும் ஒரு வாலிபர் முக்கிய குற்றவாளி என்பது கண்டறியப்பட்டுள்ளது .

டிக் டாக் வாலிபர் -வலையில் விழுந்த பெண்கள் -ஊர் ஊராக கூட்டி வந்து செய்த கொடுமை


பங்களாதேஷை சேர்ந்த ரிடோய் பாபு என்பவர் டாக்காவில் ஹிர்தாய் பாபு என்ற பெயரில் டிக் டாக்கில் பிரபலமானவர். அந்த பாபு மற்றும் ராகிபுல் இஸ்லாம் சாகர் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய போது கால்களில் சுட்டுபிடிக்கப்பட்டனர்
காவல்துறையினர் இருவரையும் பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ராமமூர்த்திநகரில் உள்ள கனகாநகருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.அப்போது இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டு பிடித்தனர் .அந்த இருவர் உள்பட மேலும் நான்கு பேர் இந்த பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் .இவர்கள் பங்களாதேஷிலிருந்து பல பெண்களை அழைத்து வந்து இந்தியாவில் பெங்களூரு ,ஹைதராபாத்,கோழிக்கோடு ,போன்ற இடங்களில் விபச்சாரத்தில் ஈடுத்தியுள்ளனர் .இதில்அந்த டிக் டாக் வாலிபர் தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி பெண்களை அவரின் வலையில் வீழ்த்தியுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளார்கள் .மேலும் அந்த குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.