ஏன் லேட்டுன்னு கேட்டார் -சொமட்டோ பாய் மூக்கிலே போட்டார் -புண்ணான உணவு ஆர்டர் செய்த பெண்

 

ஏன் லேட்டுன்னு கேட்டார் -சொமட்டோ பாய் மூக்கிலே போட்டார் -புண்ணான உணவு ஆர்டர் செய்த பெண்


உணவு ஆர்டர் செய்த பெண்ணை சோமட்டோவின் ஊழியர் மூக்கில் தாக்கிய சம்பவம் ஊடகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது .
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் ஒரு தகவல் நுட்ப பொறியாளர் சந்திராணி என்ற பெண் சமீபத்தில் சொமட்டோவில் உணவு ஆர்டர் செய்தார்.அப்போது அந்த சோமட்டோ உணவு டெலிவரி செய்யும் காமராஜ் என்ற நபர் மாலை 4 மணியளவில் லேட்டாக உணவை டெலிவரி செய்தார் .அதனால் மிகவும் பசியோடிருந்த சந்திராணி மிகவும் கோவப்பட்டு அந்த டெலிவரி பாயிடம் ஏன் லேட்டாக வந்தாய் என்று கேட்டார் .

ஏன் லேட்டுன்னு கேட்டார் -சொமட்டோ பாய் மூக்கிலே போட்டார் -புண்ணான உணவு ஆர்டர் செய்த பெண்


அதற்க்கு அந்த காமராஜ் என்பவர் சரியான காரணத்தினை சொல்லாததால் ,சந்திராணி அந்த சோமட்டோ நிறுவன அதிகாரியிடம் புகார் செய்தார் .பின்னர் அந்த உணவை திரும்பி எடுத்து போகும்படி கூறினார் .ஆனால் அதற்கு அந்த காமராஜ் மறுத்து விட்டார் .அதனால் அந்த பெண் வீட்டின் கதவை அடைக்க முற்ப்பட்டபோது அந்த சோமட்டோ ஊழியர் அந்த பெண்ணை மூக்கில் தாக்கினார் .இதனால் அந்த பெண்னின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது .அதனால் அந்த பெண் அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்று மூக்கில் கட்டு போட்டு கொண்டார் .அதன் பிறகு அந்த காமராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் பின்னர் இந்த சம்பவத்தை வீடியோவாக சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .அதை பார்த்த பலர் ஊடகத்தில் இந்த சம்பவத்தினை கண்டித்தார்கள் .இன்னும் சிலர் சோமட்டோவின் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள் .பிறகு சோமட்டோவின் நிர்வாகியோருவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் .