கருவளையத்தை போக்க பாம்பு ட்ரீட்மெண்ட் : பாம்பாட்டியின் நூதன மோசடி!

 

கருவளையத்தை போக்க பாம்பு ட்ரீட்மெண்ட் : பாம்பாட்டியின் நூதன மோசடி!

கருவளையத்தை போக்க பாம்பு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருவளையத்தை போக்க பாம்பு ட்ரீட்மெண்ட் : பாம்பாட்டியின் நூதன மோசடி!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ் புதூரைச் சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி அங்குள்ள கிராமங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இளம்பெண்கள், இளைஞர்களிடம் விஷ பாம்பை கண்ணுக்கு கீழ் தேய்த்தால் போதும் கருவளையங்கள் மறைந்து விடும் என்று வாய்க்கு வந்த மாதிரி அளந்து விட்டுள்ளார் .

கருவளையத்தை போக்க பாம்பு ட்ரீட்மெண்ட் : பாம்பாட்டியின் நூதன மோசடி!

இதை கேட்ட இளசுகள், பல ஆயிரம் செலவு செய்தாலும் போகாத, கருவளையத்தை பாம்பின் மூலம் சரி செய்வதாக கூறுகிறாரே என்று எண்ணி சிகிச்சைக்கு முன்வந்துள்ளனர். அப்போது பாம்பாட்டி குமரேசன் விஷ பாம்பை முகத்தில் சுற்றில் தேய்த்துள்ளார். இதை கண்டு பலரும் அச்சப்பட்டுள்ளனர். அத்துடன் மஞ்சள் நிறத்திலான மருந்தை முகத்தில் தேய்த்து விடுங்கள் என்று மருத்துவம் படித்தவர் போல சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதெல்லாம் பொய் என தெரியாத மக்கள் ஜாலியாக பாம்பாட்டியை வழியனுப்பி வைத்தது தான் கொடுமையிலும் கொடுமை.