இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

 

இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது.

Image

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி புதுமுக வீரர் ஆக வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரித்வி சா ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி சா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, சஞ்சு சாம்சன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ்,ஷிகர் தவான் உடன் ஜோடி சேர்ந்தார்.

அணியின் ஸ்கோர் 113 எட்டும்போது ஷிகர் தவான் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய சூரியகுமார் யாதவ் சிக்சர் அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார்,ஆனால் அடுத்த பந்தே மீண்டும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் சொதப், இறுதிக்கட்டத்தில் வந்த இஷன் கிஷன் 20 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.