நபிகள் நாயகம் குறித்து அவதூறு; வாணியம்பாடியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

நபிகள் நாயகம் குறித்து அவதூறு; வாணியம்பாடியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி வாணியம்பாடியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, கல்யாணராமனை போலீசார் கைதுசெய்தனர்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறு; வாணியம்பாடியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எல்ஐசி அலுவலகம் அருகே பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமுமுக, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய கல்யாணராமன் மீது தேசிய பாதுபாகப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக வாணியாடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.