காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

 

காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

தெருவில் மனிதர்களின் மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை பார்த்து பழனி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மந்திரவாதிகள் இப்படி செய்தார்களா அல்லது குடிமன்னர்கள் இந்த எலும்பு  கூட்டை போட்டுச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தேவங்கர் தெருவில் வசிக்கும் மக்களுக்கு, நேற்று காலை அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. தெருவில் உள்ள வீடுகள், கடைகளின் முன்பு மனிதனின் மண்டை ஓடுகள், எலும்புகள் சிதறி கிடந்தன. அந்த மண்டை ஓடுகளில் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிற பொடிகள் தூவபட்டு இருந்தது. கதவுகள் மற்றும் வாயில்களுக்கு சற்று முன்னால் அது வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்த, இதனை கடந்து செல்ல பயந்தார்கள். மந்திரவாதிகள் யாராவது செய்வினை செய்து இருக்கலாம் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

ஆனால், இது குறித்து பொதுமக்கள் யாரும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தெருவிற்கு வந்த காவல்துறையினர் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், குடித்துவிட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளதால், அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பழனியில் தெரு ஒன்றில் மனித மண்டை ஓடு கிடந்தது அந்த பகுதி மக்களை பதறவைத்துள்ளது.