கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்! அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு

 

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்! அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு

இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்குதல் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்! அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்மூலம் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக டாக்டர்கள் மைசூருவில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.