சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் : பெண் பக்தர்களிடம் தீவிர விசாரணை!

 

சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் : பெண் பக்தர்களிடம் தீவிர விசாரணை!

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் 3 பெண் பக்தர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் : பெண் பக்தர்களிடம் தீவிர விசாரணை!

சிவசங்கர் பாபா நடத்தி வந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இதுகுறித்து சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பபட்ட நிலையில் அவர் டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் டேராடூன் விரைந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் அவரது பெண் பக்தர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் : பெண் பக்தர்களிடம் தீவிர விசாரணை!

இதை தொடர்ந்து நேற்று இரவு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஞ்சியோ செய்து இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் சிவசங்கர் பாபா இன்று உடல்நல குறைவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க்குகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.அதேபோல் பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் 3 பெண் பக்தர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீசார், சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பெண் பக்தர்கள் கருணா, நீரஜ், ஸ்மிதாவை பிடித்து சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர்.