சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீனா?

 

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீனா?

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீனா?

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்திவந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சிவசங்கர் பாபாவிற்கு உடைந்தையாக இருந்த அவரது பெண் சீடர் சுஸ்மிதாவின் ஜாமீன் மனு, மீதான விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.