சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை!

 

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை!

சிவசங்கர் பாபா வெளிநாடுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை!

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இங்குள்ள விடுதியில் படித்து வரும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளன. குறிப்பாக சாமியார் சிவசங்கர் பாபா மீது மூன்று மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதில், இருவர் முன்னாள் மாணவிகள் என்றும், ஒருவர் தற்போது படித்து வரும் மாணவி என்றும் கூறப்படுகிறது.

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை!

இது குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை!

இந்நிலையில் சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. டேராடூனில் உள்ள அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி குழு அங்கு விரைந்துள்ளது.