முதலமைச்சர் நிவாரணமாக ரூ. 1 கோடி நிதியளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்

 

முதலமைச்சர் நிவாரணமாக ரூ. 1 கோடி நிதியளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் நிவாரணமாக ரூ. 1 கோடி நிதியளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்

இந்நிலையில் முதலமைச்சர் நிவாரணத்திற்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிதியளித்தனர். தலைமை செயலகத்திற்கு சென்ற நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடியை கொடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், “கொரோனா பரவலிலிருந்து மக்களை காப்பாற்றப்பட வேண்டும். கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தங்களால் முடிந்த நிதியை அளித்தோம்.தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் – அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி” எனக் கூறினார்.