சாத்தான்குளம் விவகாரம்: குற்றவாளிகளுக்கு தண்டனை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?- சிவகார்த்திகேயன்

 

சாத்தான்குளம் விவகாரம்: குற்றவாளிகளுக்கு தண்டனை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?- சிவகார்த்திகேயன்

சாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளான தந்தை – மகன் போலீசாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாத்தான்குளம் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாது திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கிடைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “மிருகத்தனமான குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். சாத்தான்குளம் கொடூரத்திற்கு காரணமானவர்களை தக்க சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்; இது போன்ற குற்றங்களை மீண்டும் யாரும் செய்யாத அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.