மதிமுகவிலிருந்து விலகிய சிவபாலனுக்கு மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு!

 

மதிமுகவிலிருந்து விலகிய சிவபாலனுக்கு மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளராக சு. சிவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர மதிமுக செயலாளராக இருந்த சிவபாலன், அண்மையில் திடீரென கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

மதிமுகவிலிருந்து விலகிய சிவபாலனுக்கு மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு!

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பார்வையாளராகவும் சு. சிவபாலன் அவர்களை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட சு. சிவபாலன் அவர்களது வருகை நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.