சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றமில்லை… சென்னைக்கு மாற்றம்!

 

சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றமில்லை… சென்னைக்கு மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கினார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றமில்லை… சென்னைக்கு மாற்றம்!

அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, தமிழகம் அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றமில்லை… சென்னைக்கு மாற்றம்!

இந்த நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையாததால் சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன் படி, ஆம்புலன்ஸ் மூலம் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.