ஆபாச ஓவியப்போட்டி நடத்தி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த சிவசங்கர் பாபா

 

ஆபாச ஓவியப்போட்டி நடத்தி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த சிவசங்கர் பாபா

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மூளைச்சலவை செய்த சுஷ்மிதா என்ற ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச ஓவியப்போட்டி நடத்தி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த சிவசங்கர் பாபா

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா எனும் சாமியார் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆபாச படம் வரைந்து, ஆபாச உறுப்புகளை வரைந்து பாபாவிடம் காண்பிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண்களை சிவசங்கர் பாபா வழங்குவார் என பாதிக்கப்பட்ட மாணவி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பாபாவை சந்திக்க செல்லும் மாணவிகளுக்கு ஆல்கஹால் கொடுப்பதும், நிர்வாணப்படுத்தி சீண்டலில் ஈடுபடுவதும் அங்கு வழக்கம் என்றும், தன்னுடன் படித்த மாணவிகள் இருவர் பாபாவுடன் இருந்ததை தான் பார்த்ததாகவும் அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.