மூன்றாவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது!

 

மூன்றாவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3ஆவது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. சுமார் 18 முன்னாள் மாணவிகள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது பதிந்திருந்த மூன்றாவது வழக்கையும் போக்சோ பிரிவுக்கு மாற்றம் செய்தனர்.

மூன்றாவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது!

சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது பென்டிரைவ், சிடிக்கள், லேப்டாப் உள்ளிட்ட பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 5 பள்ளி ஆசிரியைகளை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். 2 ஆசிரியைகள் தப்பி ஓடிய நிலையில் மூன்று ஆசிரியர்கள் மட்டும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதனிடையே, சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது போக்சோ வழக்கில் இன்று அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைதாகி உள்ள சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.