முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

 

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற தாராளமாக நிதிக்கொடுத்து உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். கொரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே அந்த பணம் பயன்படுத்தப்படுமென்றும் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிவக்கார்த்திக்கேயன், நிவாரண தொகையை அவரிடம் வழங்கினார். இதேபோல் நடிகர் ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜா, தந்தை எடிட்டர் மோகன் ஆகியோருடன் சென்று 10 லட்சம் நிதியுதவி அளித்தார்.