சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

 

சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்று ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக அதிகரித்த நிலையில் 21,57,538 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

இந்நிலையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளார். டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!

நாளிதழ் ஒன்றில் ஆஷிஷ் யெச்சூரி பணியாற்றி வந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தனது மூத்த மகன் ஆஷிஷ் இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.