பாய் பிரண்டோடு பேசிய அக்கா -கண்டித்த தம்பி -அடுத்து ஹெட் போனை எடுத்த அக்கா செஞ்ச கொடுமை

 

பாய் பிரண்டோடு பேசிய அக்கா -கண்டித்த தம்பி -அடுத்து ஹெட் போனை எடுத்த அக்கா செஞ்ச கொடுமை

எந்நேரமும் போனில் பேசியதை கண்டித்த தம்பியை, அவரின் அக்காவே ஹெட் போனால் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

பாய் பிரண்டோடு பேசிய அக்கா -கண்டித்த தம்பி -அடுத்து ஹெட் போனை எடுத்த அக்கா செஞ்ச கொடுமை

உத்தரபிரதேசத்தின் ராய் பரேலி மாவட்டத்தில் 15 வயது டீனேஜ் பெண்ணொருவர் ,தன்னுடைய தம்பி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த டீனேஜ் பெண்ணுக்கு ஒரு பாய் பிரண்ட் இருந்தார் .அதனால் அந்த பெண் அடிக்கடி அந்த ஆண் நண்பருடன் போனில் பேசி வந்தார் .இது அவரின் ஒன்பது வயதான தம்பிக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் தன்னுடைய அக்காவை கண்டித்தார் .ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேக்காமல் தொடர்ந்து போனில் பேசி வந்தார் .

இந்நிலையில்  கடந்த வியாழக்கிழமையன்று அதே போல் , அந்த டீனேஜ் பெண் தன்னுடைய ஆண் நண்பரோடு போனில் அரட்டையடித்து கொண்டிருந்தார்.அப்போது அவரின் தம்பி அந்த அக்காவின் செயலை கண்டித்தார் .அதனால் கோவப்பட்ட அந்த சகோதரி உடனே தன்னிடமிருந்த ஹெட் போனை எடுத்து அவரின் கழுத்தை நெறித்து கொன்று விட்டார் .

அதன் பிறகு அந்த பெண் தன்னுடைய தம்பியின் சடலத்தை அந்த வீட்டிலுள்ள ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டார் .அதன் பிறகு அவரின் பெற்றோர் தங்களின் மகனை காணாமல் தேடினார்கள். அப்போது ஸ்டோர் ரூமிலிருந்து கெட்ட வாடை வருவதை உணர்ந்த  அவர்கள்,அங்கு போய் பார்த்தனர் .அப்போது அவர்களின் மகன் அங்கு பிணமாகி கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள் .அதன் பிறகு போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவனை அவரின் அக்காவே ஹெட் போனால் கொன்றதை கண்டுபிடித்து அவரை  கைது செய்தார்கள் . 

பாய் பிரண்டோடு பேசிய அக்கா -கண்டித்த தம்பி -அடுத்து ஹெட் போனை எடுத்த அக்கா செஞ்ச கொடுமை