கணவர், 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலுடனுடன் ஓடிய பெண்ணை சகோதரரே வெட்டிக்கொன்ற கொடூரம்

 

கணவர், 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலுடனுடன் ஓடிய பெண்ணை சகோதரரே வெட்டிக்கொன்ற கொடூரம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆயம்மாளுக்கும் விமல் என்பவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்த நிலையில், ஆயம்மாள் தெற்குத்தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த திருமணமாக அன்புநாதனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக,  திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது, இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயம்மாள் தனது மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு அன்புநாதனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்,  இதனைத்தொடர்ந்து  அவர்கள் இருப்பிடத்தை அறிந்த உறவினர்கள் அவர்களை சாதூர்த்தியமாக பேசி. தெற்குத்தெருக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும்போது, ஆண்டிப்பட்டி விலக்கு நல்லான்பொத்தன் கண்மாய் சாலையில் கத்தி, வாளுடன் வந்த கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஆயம்மாள் மற்றும் அன்புநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின், உடலை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவர், 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலுடனுடன் ஓடிய பெண்ணை சகோதரரே வெட்டிக்கொன்ற கொடூரம்

ஆயம்மாளின் உடன் பிறந்த சகோதரரும், திமுக ஒன்றிய கவுன்சிலருமான தெற்குத்தெருவைச் சேர்ந்த தமிழ்மாறன், மற்றும் உறவினர்களான ராஜா (எ) அய்யனார்,  சதீஸ் மற்றும் விமல் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. அனைவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். திருமணத்தை மீறிய உறவின் காரணமாக, பலமுறை கண்டித்தும் கேட்காமல், பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற பெண்ணால், உடன் பிறந்த சகோதரும், கணவரும் கொலையாளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.