தஞ்சையில் பெற்றோர் கைவிட்டதால் அண்ணன் – தங்கை, விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 

தஞ்சையில் பெற்றோர் கைவிட்டதால் அண்ணன் – தங்கை, விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

தஞ்சை

தஞ்சை அருகே பெற்றோர் கை விட்டதால் மனமுடைந்த அண்ணன், தங்கை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருவையாறு அடுத்த அல்லூர் கிராமத்தை சேர்ந்த காந்திமதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கரண்ராஜ் (18) என்ற மகனும், இந்துமதி (18) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், மன வருத்தம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாக ரத்து பெற்று, தனியே வாழ்ந்து வருகின்றனர்.

தஞ்சையில் பெற்றோர் கைவிட்டதால் அண்ணன் – தங்கை, விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

குழந்தைகள் இருவரும், தாய் காந்திமதியிடம் வளர்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் வளர்ந்து விட்டதால், தந்தை கனராஜிடம் செல்லும்படி காந்திமதி தெரிவித்துள்ளார். இதனால் கனகராஜிடம் சென்றபோது அவர், இத்தனை நாட்களாக தாயிடமிருந்து வந்த இருவரும், சொத்துக்காக தன்னிடம் வந்துள்ளதாக கூறி, திரும்பி செல்லும்படி கூறியுள்ளார்.

பெற்று வளர்த்த தாயும், தந்தையும் தங்களை கை விட்டதால் மனமுடைந்த, கரண்ராஜும், இந்துமதியும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தகவலின் பேரில், அவர்களை தஞ்சை கிழக்கு போலீசார் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற்து. இது குறித்து, தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.