காங்., மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா

 

காங்., மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 9 ஆம் தேதி வரை அபிஷேக் மனு சிங்வியை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடைய பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. கடந்த சில நாட்களாகவே சிங்விக்கு காய்ச்சல் இருந்துள்ளது. தற்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்., மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஆவார். முன்னதாக சஞ்சய் ஹாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடதக்கது.