“பாடகர் எஸ்.பிபி நலமாக இருக்கிறார்” செயற்கை சுவாசத்துடன் உரிய சிகிச்சை – மருத்துவமனை தகவல்

 

“பாடகர் எஸ்.பிபி நலமாக இருக்கிறார்” செயற்கை சுவாசத்துடன் உரிய சிகிச்சை – மருத்துவமனை தகவல்

சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவும் கொரோனா வைரஸால், இசை ஜாம்பவானான எஸ்பி.பாலசுப்பிர மணியமும் பாதிக்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அன்றே தன் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் எஸ்.பிபி வீடியோ வெளியிட்டார்.

“பாடகர் எஸ்.பிபி நலமாக இருக்கிறார்” செயற்கை சுவாசத்துடன் உரிய சிகிச்சை – மருத்துவமனை தகவல்

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக, எஸ்.பிபியிடம் இருந்து எவராலும் பிரிக்க முடியாத, ஆருயிர் நண்பனான இளையராஜா மிகுந்த வருத்தமடைந்தார். ‘நம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது..உனக்காக காத்திருக்கிறேன்.. சீக்கிரம் எழுந்து வா பாலு’ உருக்கமாக பேசிய இளையராஜா அதனை வீடியோவாக வெளிட்டிருந்தார். இது காண்போரை கண்கலங்கச் செய்தது.

“பாடகர் எஸ்.பிபி நலமாக இருக்கிறார்” செயற்கை சுவாசத்துடன் உரிய சிகிச்சை – மருத்துவமனை தகவல்

இந்த நிலையில், எஸ்.பிபி யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.