பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை சீராக இருக்கிறது : மருத்துவமனை அறிக்கை

 

பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை சீராக இருக்கிறது : மருத்துவமனை அறிக்கை

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் பிரபல பாடகர் எஸ்.பிபியும் சிக்கினார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை, மோசமடைந்து வருவதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது பாட்டால் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த எஸ்.பிபி கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான அந்த செய்தி மக்களை அதிர்ச்சி அடையச்செய்தது. இசை அவரை நிச்சயம் மீட்டு, எங்களை மகிழ்விக்க திரும்ப வரும் என எஸ்பிபியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை சீராக இருக்கிறது : மருத்துவமனை அறிக்கை

அவர் மீண்டு வர வேண்டும் என்பதற்காக சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதே போல, சில கோவில்களில் எஸ்.பிபியின் பாடல்கள் வாத்தியங்களாக இசைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஐசியூவில் உள்ள எஸ்பிபிக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா, பிரிட்டன் மருத்துவருடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.