பிரபல நாட்டுப்புற பாடகி மருத்துவமனையில் அனுமதி! அரசிடம் உதவி கேட்டு நிற்கும் அவலம்…

 

பிரபல நாட்டுப்புற பாடகி மருத்துவமனையில் அனுமதி! அரசிடம் உதவி கேட்டு நிற்கும் அவலம்…

ஆண்பாவம், ஆயுசு 100, கோபாலா கோபாலா போன்ற படங்களில் நடித்த பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கருப்பாயி தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் வசித்து வருகிறார். பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார். மேலும் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்ட இவர் உதவித்தொகை வழங்கவேண்டும் என முதலமைச்சருக்கு மனு கொடுத்தார். இதனால் இவருக்கு உதவி தொகை அதிகரிக்கப்பட்டது

பிரபல நாட்டுப்புற பாடகி மருத்துவமனையில் அனுமதி! அரசிடம் உதவி கேட்டு நிற்கும் அவலம்…

இந்நிலையில் கொல்லங்குடியில் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, சாலையை கடக்கும் போது, இரு சக்கர வாகனம் மோதி கருப்பாயிக்கு கால்முறிவு ஏற்பட்டது. தற்போது, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொருளாதாரத்தில் மிகவும் சிரமபட்டு வரும் கொல்லங்குடி கருப்பாயி, மருத்துவ செலவுக்கு உதவ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.